இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

இயேசு மரித்த நாள்

விவிலியத்திலுள்ள தகவல்களைக் கொண்டு இயேசு மரித்த நாளை சரியாகக் கணக்கிட முடியாது. விவிலியத்தில் இயேசு நிசான் மாதம் 
14 அல்லது 15 ஆம் நாள் மரித்ததாக கூறப்பட்டுள்ளது. டைபிரியஸ் சீசரின் காலம் என்பதை விட ஆண்டு பற்றிய குறிப்பேதும் இல்லை. அனால் நான்கு நற்செய்திகளின் படியும் இயேசு மரித்தது ஆயத்தப்படுத்தல் நாளிலாகும். (ஓய்வுநாளுக்கு முதல் நாளாகும்) இதன் படி இயேசு மரித்தது வெள்ளிக்கிழமையாகும். மேலும் இயேசு மரித்த நாள் கி.பி. 33 ஏப்பிரல் 3 ஆம் நாளாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தினத்தில் பகுதி சந்திரகிரகணமும் ஏற்பட்டுள்ளது. (இயேசு சிலுவையில் உயிர் நீத்தபோது வானம் இருண்டது). தற்போது புனித வெள்ளி ஏப்ரல் 23 க்கும் மே 7 க்குமிடையே ஒரு வெள்ளியில் அனுசரிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: